கள்ளக்காதலியை கொன்றுவிட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

முஸ்தபாவிடம் மாகி செலவுக்கு பணம் கேட்டதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முஸ்தபா, மாகியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
முஸ்தபா - மாகி
முஸ்தபா - மாகி
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கியூ பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முஸ்தபா (56). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் முஸ்தபாவுக்கும், காந்தல் புதுநகரை சேர்ந்த மாகி(51) என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி கணவர் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாகி, குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்தநிலையில் இருவரும் ஊட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உல்லாசம் அனுபவித்தனர். அப்போது முஸ்தபாவிடம் மாகி செலவுக்கு பணம் கேட்டதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முஸ்தபா, மாகியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை அவரது வீட்டுக்கு கொண்டு வந்த முஸ்தபா அங்குள்ளவர்களிடம் கொரோனா பாதிப்பால் மாகி இறந்து விட்டதாக கூறினார். எனினும் சந்தேகம் அடைந்த அவர்கள், ஊட்டி நகர மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணையில் முஸ்தபாவின் குட்டு வெளிப்பட்டது. தன்னிடம் பணம் கேட்டு தகராறு செய்த கள்ளக்காதலி மாகியை கொலை செய்துவிட்டு நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தபாவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com