புதுவையில் பிளஸ்-2 மாணவி மாயம்

புதுவையில் வீட்டு வேலைகள் செய்யாமல் இருந்த மகளை தாய் கண்டித்ததால் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
மாயம்
மாயம்
Published on

மூலக்குளம்:

புதுவை சண்முகாபுரம் அண்ணா வீதியை சேர்ந்த மாரிமுத்து மகள் சர்மிளா (வயது 17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் சர்மிளா வீட்டு வேலைகள் செய்யாமல் இருந்துள்ளார். இதனை அவரது தாயார் செண்பகவள்ளி கண்டித்தார். இதனால் கோபித்துக்கொண்டு சர்மிளா வீட்டை விட்டு வெளியேறினார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் செண்பகவள்ளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com