தாயாருடன் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பள்ளிக்கு செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

அனுப்பர்பாளையம்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது மகள் பிரியதர்ஷினி (17). அவினாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பள்ளி செல்ல மறுத்ததால் தாயுக்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மலர்கொடியும், பிரியதர்ஷினியும் விஷம் குடித்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com