

அனுப்பர்பாளையம்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது மகள் பிரியதர்ஷினி (17). அவினாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
பள்ளி செல்ல மறுத்ததால் தாயுக்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மலர்கொடியும், பிரியதர்ஷினியும் விஷம் குடித்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.