கோரிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள், கலெக்டரிடம் மனு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாரதிவளவன் தலைமையில், அச்சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பெரம்பலூர்:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாரதிவளவன் தலைமையில், அச்சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். அதில், உங்கள் தொகுதியில் முதல்வர் சிறப்பு திட்டத்தில் களநிலையில் உள்ள பிரச்சினைகளை களைந்திட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தியதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆணைகளை விரைவில் வழங்கிட வேண்டும். தேர்தல் பணியில் உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புமாறு கலெக்டரை வருவாய்த்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com