பேரையூர் அருகே மதுபாட்டில்களுடன் பெண் கைது

பேரையூர் அருகே மதுபாட்டில்களுடன் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பேரையூர்:

சாப்டூர் போலீசார் பெரிய வண்டாரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ரேஷன் கடையின் பின்புறம் மெய்யனுத்தம்பட்டியை சேர்ந்த குமராயி (வயது 40) என்பவர் விற்பனை செய்வதற்காக 20 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தாராம். போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com