

பேரையூர்:
பேரையூர் தாலுகாவில் உள்ளது டி.பாறைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 55). இவர் சம்பவத்தன்று வண்டபுலி காலனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.