புதுவையில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை

புதுவையில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி பாக்குமுடையான்பேட் அனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 57). பெயிண்டர். மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ரவிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது குறித்து ரவி தனது மனைவியிடம் கூறியுள்ளார். அதனை அவர் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com