மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை

ராமருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் வி‌ஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே சேடப்பட்டி போலீஸ் சரகம் வீராளம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது70). இவருடைய மனைவி 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய பிள்ளைகள் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

ராமருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் யாரும் இல்லாத விரக்தியில் ராமர் வி‌ஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com