விதை உற்பத்தி பண்ணையில் அதிகாரி ஆய்வு

சாமை பயிரை நெல் பயிரை அறுவடை செய்யும் எந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியும். சாமை பயிரின் வைக்கோல் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
விதை உற்பத்தி பண்ணையில் அதிகாரி ஆய்வு
விதை உற்பத்தி பண்ணையில் அதிகாரி ஆய்வு
Published on

திருவண்ணாமலை:

தமிழ்நாட்டில் சாமை போன்ற சிறுதானியங்கள் விளையும் மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று. சாமை பயிரானது 85 முதல் 90 நாட்கள் வளரக்கூடியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில் உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்.

அந்தவகையில் அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில் பயிரிடப்பட்டு உள்ள சாமை மற்றும் திணை பயிர்களின் வல்லுனர் விதை உற்பத்தி பண்ணையில் திருவண்ணாமலை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாமை மற்றும் திணை பயிர்களில் பிற ரக கலப்பு மற்றும் தூய்மையினை அவர் ஆய்வு செய்தார். இந்த ரக சாமை அதிக இரும்பு சத்து நிறைந்தது. வறட்சியை தாங்கி வளரும். சாமை பயிரின் வைக்கோல் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். சாமை பயிரை நெல் பயிரை அறுவடை செய்யும் எந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியும். பெரும்பாலும் மானாவாரி பருவமான ஆடி முதல் புரட்டாசி மாதம் வரை விதைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியரும், தலைவருமான நிர்மலாகுமாரி உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com