மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்று விட்டேன்: நித்யானந்தா அறிவிப்பால் பரபரப்பு

மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார்.
நித்யானந்தா
நித்யானந்தா
Published on

கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவானார்.

அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் கைது நடவடிக்கைகள் முடங்கி உள்ளது.

இதை பயன்படுத்தி நித்யானந்தா சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் தன்னை மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தில் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 2019-ம் ஆண்டு அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் நித்யானந்தா தற்போது தன்னை மதுரை ஆதீனம் என அறிவித்து கொண்டதோடு, பதவி ஏற்று கொண்டதாகவும் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் அருணகிரி நாதருடன் தான் இருக்கும் பழைய படத்தையும் சேர்த்து பதிவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com