வேளாண் அவசர சட்டங்களை கண்டித்து நாகை ரெயில் நிலையம் முற்றுகை - மனிதநேய மக்கள் கட்சியினர் 75 பேர் கைது

வேளாண் அவசர சட்டங்களை கண்டித்து நாகை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நாகப்பட்டினம்:

மத்திய அரசின் வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாகை ரெயில் நிைலயத்தை நேற்று மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுைகயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி பொருளாளர் இப்ராகிம், மாவட்ட செயலாளர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் வேளாண் அவசர திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com