முத்தியால்பேட்டையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

முத்தியால் பேட்டையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது சகோதரர் மணிகண்டன் (வயது 30). இவர்களது தாய்- தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.

இதையடுத்து மணிகண்டன் தனது அண்ணன் முருகன் பராமரிப்பில் இருந்து வந்தார். இதற்கிடையே மணிகண்டனுக்கு ஆஸ்துமா நோய் இருந்து வந்தது. இதனால் அவரால் வேலைக்கு எதுவும் செல்ல முடியவில்லை. வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை முருகன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி பிரபாவதி அருகில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றிருந்தார்.

அப்போது மணிகண்டனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

மதியம் மணிகண்டன் மனைவி பிரபாவதி சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்து செல்ல வீட்டுக்கு வந்தார். அப்போது மணிகண்டன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிகண்டனை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com