மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

திருவண்ணாமலை செங்கம் சாலையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
கைது
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் செங்கம் அருகில் உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்தேஸ்வரன் (வயது 30) என்பதும், பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com