சிதம்பரம் ஜவுளிக்கடையில் திருடிய மாமியார், மருமகள் கைது

சிதம்பரம் ஜவுளிக்கடையில் திருடிய மாமியார், மருமகளை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சிதம்பரம்:

குறிஞ்சிப்பாடி புவனகிரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஞானசவுந்தரி (வயது 58). இவருடைய மருமகள் மதிவதனி (36). இவர்கள் இருவரும் சிதம்பரம் மேலவீதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க சென்றனர்.

அப்போது, அங்கு சேலைகள், நைட்டிகளை அவர்கள் திருடினர். இதை கண்காணிப்பு கேமரா மூலம் கடை உரிமையாளர்கள் பார்த்து அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து, ஞானசவுந்தரி, மதிவதனி ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com