

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக அமைச்சர் உதயகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ‘‘வரும் 1-ந்தேதி (நாளை) மற்றும் 2-ந்தேதி (நாளைமறுநாள்)-களில் தென்தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்.
29.11.2020 வரை இயல்பான மழை 352.6 மி.மீட்டர் பெய்திருக்க வேண்டும். ஆனால் 301.8 மி.மீட்டர் மழையே பெய்துள்ளது. இது இயல்பை விட 14 சதவீதம் குறைவு. நீர்த்தேக்கங்களை பொறுத்தவரை 24 மணி நேரமும கண்காணிக்கப்படுகிறது’’ என்றார்.