

மேலூர்:
மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி கோமேஸ்வரி(வயது 34). இவர் வயலுக்கு சென்று விட்டு ஊரின் அருகே நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியபடி 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கோமேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.