மத்தூர் அருகே பெண் தற்கொலை

மத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சென்னம்மாள் (வயது 24). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சென்னம்மாள் கணவரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். தனக்கு வேலை இருப்பதாக மாரியப்பன் கூறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சென்னம்மாள் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக சென்னம்மாளின் அண்ணன் பெரியண்ணன் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com