மணமேல்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவர் கைது

மணமேல்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மணமேல்குடி:

மணமேல்குடியை அடுத்த இடையாத்திமங்கலம் பகுதியில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியின் டிரைவர் ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com