மானாமதுரையில் திருமண மறுவீட்டுக்கு மீன்பாடி வண்டியில் சென்ற புதுமண தம்பதி

திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் மறுவீட்டிற்கு புறப்பட்டனர். மாப்பிள்ளை வீட்டான மாரியம்மன் நகருக்கு அவர்கள் மீன்பாடி வண்டியில் 10 கிலோமீட்டர் தூரம் சென்றனர். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
மறுவீட்டுக்கு மீன்பாடி வண்டியில் சென்ற புதுமண தம்பதி
மறுவீட்டுக்கு மீன்பாடி வண்டியில் சென்ற புதுமண தம்பதி
Published on

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியப்பன் நகரில் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கழைக் கூத்தாடுவது, சர்க்கஸ் செய்வது இவர்களின் பிராதன தொழிலாக இருந்துவருகிறது.

மானாமதுரை பகுதியில் உள்ள கங்கை அம்மன் குடியிருப்பு, மாரியம்மன் நகர், சன்னதி புதுக்குளம் பகுதியில் பெரும்பாலான கழைக் கூத்தாடிகள் வசித்து வருகின்றனர்.

இதனிையே இந்த தொழிலை செய்து வரும் சன்னதிபுதுகுளத்தை சேர்ந்த சுப்பையா மகள் அம்சவல்லிக்கும், மாரியப்பன் நகரை சேர்ந்த கணேஷ் மகன் விஜய்க்கும் திருமணம் நடை பெற்றது.

திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் மறுவீட்டிற்கு புறப்பட்டனர். மாப்பிள்ளை வீட்டான மாரியம்மன் நகருக்கு அவர்கள் மீன்பாடி வண்டியில் 10 கிலோமீட்டர் தூரம் சென்றனர். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

இதுகுறித்து மணமகனின் உறவினர்கள் கூறுகையில் ‘பெண் வீட்டில் வரதட்சணை என்பது கிடையாது. நாங்கள் யாரும் வாங்க மாட்டோம். சர்க்கஸ் வருமானம் மட்டுமே.

பெண்ணுக்கு எங்களால் முடிந்த நகைகளை போட்டு நாங்கள் திருமணம் செய்து கூட்டி வருவோம். ஒரு காலத்தில் மாட்டுவண்டியில் அழைத்து சென்ற காலம் போய் தற்போது நவீன காலத்தில் குதிரை வண்டியிலும், கார்களிலும் அழைத்து செல்வது வழக்கம். எங்கள் வசதிக்கு ஏற்ப மீன்பாடி வண்டியில் அழைத்து வருவோம். இருப்பதே வைத்து மகிழ்ச்சி அடைகின்றோம் என்றனர்.

இதுகுறித்து மாப்பிள்ளை விஜய் கூறும்போது, ‘இந்த வண்டியில் வருவது தான் மகிழ்ச்சி என்றாலும் ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் கையில் இழுத்து செல்லுவோம். ஆனால் தற்போது காலம் மாறியதால் நாங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் மீன்பாடி வண்டியில் ஊர்வலமாக வருகிறோம். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com