தேங்காய்திட்டு ஆற்று வாய்க்காலில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

தனிமையில் வசித்து வந்த பாஸ்கர் சம்பவத்தன்று குடிபோதையில் ஆற்று வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

புதுச்சேரி:

மரப்பாலத்தில் இருந்து தேங்காய்திட்டுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆற்று வாய்க்காலில் நேற்று முன்தினம் ஒரு ஆண் பிணம் மிதந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ஆற்றில் பிணமாக மிதந்தவர் யார்- எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆற்றில் பிணமாக மிதந்தவர் தேங்காய்திட்டு புதுநகரை சேர்ந்த பாஸ்கர் என்ற இளங்கோ (வயது47) என்பது தெரியவந்தது.

இவருக்கு திருமணமாகி சிவக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கூலி தொழிலாளியான பாஸ்கர் மது குடிக்கும் பழக்கத்தால் அவரை விட்டு அவரது மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார்.

தனிமையில் வசித்து வந்த பாஸ்கர் சம்பவத்தன்று குடிபோதையில் ஆற்று வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com