ஹால் ஆப் பேம் - இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்த்தனேக்கு கவுரவம்

ஹால் ஆப் பேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மஹேலா ஜெயவர்த்தனே
மஹேலா ஜெயவர்த்தனே
Published on

கொழும்பு:

சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ஹால் ஆப் பேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், ஹால் ஆப் பேம் என்ற அந்தப் பட்டியலில் புதியதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2014ல் இலங்கை அணி டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும், ஐசிசி நடத்திய 4 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் முரளீதரன், சங்ககராவை தொடர்ந்து ஹால் ஆப் பேம் விருது பெறும் 3வது வீரர் ஆவார்.

இதேபோல், தென் ஆப்பிரிக்காவின் ஆல் ரவுண்டரான ஷான் பொல்லாக்கை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 

மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனையான மறைந்த ஜானெட் பிரிட்டின் பெயரும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com