

நல்லம்பள்ளி:
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள தளவாய்அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராமாக்காள் (வயது70). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமாக்காள், ஆட்டுக்காரன் பட்டி பகுதியில் சாலையோரம் அம்மி கல் செதுக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வந்த அவர் தான் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல சாலையை கடக்கும் போது பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ராமாக்காள், தலை நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து தருமபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.