பர்கூர் அருகே மது, கஞ்சா விற்றவர்கள் கைது

பர்கூர் அருகே மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பர்கூர்:

பர்கூர் இன்ஸ்பெக்டர் சவிதா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை விற்பனை செய்த எம்.ஜி. என்பவரையும், தம்மகவுண்டனூர் பகுதியில் கஞ்சா விற்ற பவுனம்மாள் என்பவரையும் கைது செய்தனர். 

மேலும் ஜெகதேவி பகுதியில் அன்வர் (வயது 65), அஜித்குமார் (25) ஆகியோர் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 825 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com