கே.வி.குப்பம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

கே.வி.குப்பம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
குடிநீர் தட்டுப்பாடு
Published on

கே.வி.குப்பம்:

கே.வி.குப்பம் தாலுகா பி.கே.புரம் பஞ்சாயத்தை சேர்ந்த வேளாளர் வீதி, வாணியர் வீதி, ஓம் சக்தி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் பஞ்சாயத்து மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் போலீசார் வந்து பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com