குத்தாலம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

குத்தாலம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலி
நீரில் மூழ்கி பலி
Published on

குத்தாலம்:

சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சிவமூர்த்தி (வயது 29). இவரது மனைவி ஹரிணி. இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. சிவமூர்த்தி தனது மனைவியுடன் தீபாவளி பண்டிகைக்காக நாகை மாவட்டம் குத்தாலம் தோப்புத் தெருவில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று தனது மைத்துனருடன் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஹரிணி அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com