வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1890 லி்ட்டர் சாராயம் பறிமுதல்- வாலிபர் கைது

வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1890 லி்ட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக மயிலாடுதுறை மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் கோனேரிராஜபுரம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்த கோபு மகன் சூர்யா(வயது24) அதே பகுதியில் உள்ள ராமதுரை என்பவரது வீட்டின் பின்புறத்தில் 54 கேன்களில் 1890 லிட்டர் சாராயத்தை மண்ணில் புதைத்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாராய கேன்களை பறிமுதல் செய்து பாலையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com