குத்தாலம் அருகே சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

குத்தாலம் அருகே சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

குத்தாலம்:

குத்தாலம் தாலுகா சின்னகொக்கூர் பீமாராவ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் சூரியமூர்த்தி (வயது22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் செண்பகச்சேரி மெயின் ரோட்டில் சென்றார். அப்போது ஒரு வீட்டின் சுற்றுச்சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த சூரியமூர்த்தி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூரியமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com