கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீர் மரணம்

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 48) என்பவர் சம்பவத்தன்று கடலில் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் முருகனை தேடி கடலுக்கு சென்றனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை மீனவர் முருகனின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கடலோர காவல் குழுமத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் நவீன் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், முருகன் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென இறந்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com