கிருமாம்பாக்கம் அருகே குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கிருமாம்பாக்கம் அருகே குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி பலி
தொழிலாளி பலி
Published on

பாகூர்:

கிருமாம்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கூலித் தொழிலாளி. இவர் 2 தினங்களுக்கு முன்பு புதுவை டி.என்.பாளையத்தில் உள்ள சாராயக் கடைக்கு குடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் சுப்பிரமணி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மலட்டாற்றில் ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் அங்கு சென்று இறந்தவர் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் அது சுப்பிரமணி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கரிக்கன் நகர் - டி.என்.பாளையத்திற்கு இடையே உள்ள மலட்டாற்றின் சிறிய பாலத்தில் சுப்பிரமணி நடந்து சென்றபோது தவறி விழுந்து செத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com