கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காக்கழனி தோப்பு தெருவை சேர்ந்த அபிஷேக் (வயது22), அதே பகுதியை சேர்ந்த குமார் (41), பழையனூர் மேல்பாதியை சேர்ந்த விஜயதீனா (25), நாகூர் தைக்கால் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் (20) ஆகியோர் என்பதும், அவர்கள் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com