கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கலியபெருமாள், அசோக்குமார் மற்றும் போலீசார் ஆழியூர்-பெருங்கடம்பனூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்கடம்பனூர் வைரவன் இருப்பு பகுதியில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நாகூர் அருகே தெத்தி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் உமாபதி (வயது19), நாகூர் பட்டினச்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சுபாஷ் (24) என்பதும். இவர்கள் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்து கீழ்வேளூர் பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாபதி, சுபாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com