கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காக்கழனி கடுவையாற்றகரையில் சாராயம் விற்ற காக்கழனி தோப்பு தெருவை சேர்ந்த துரைசாமி மகன் அருள் பாண்டி (வயது29), காக்கழனி கடுவையாறு சுடுகாடுஅருகே சாராயம் விற்ற காக்கழனி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அசரப் அலி மகன் சித்திக் (33) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com