கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே நி்ன்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த வெள்ளபாண்டி மனைவி சத்யா (வயது34), குருமனாங்குடி தெற்கு தெருவை சேர்ந்த வேதரெத்தினம் மகன் கார்த்திகேயன் (30), பெருங்கடம்பனூர் மில்லடி தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயராஜ் (40) ஆகியோர் என்பதும், அவர்கள் சாராயம் விற்றதும் தெரியவந்தது. 

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com