கீரனூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கீரனூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கீரனூர்:

கீரனூர் அருகே உள்ள மோசகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 38), விவசாயி. வயிற்று வலியால் அவதி அடைந்து அவர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உயிருக்கு ஆபத்தானநிலையில் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com