காவேரிப்பட்டணம் அருகே வியாபாரி தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பாலய்யா (வயது 40). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். இவர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் திரும்ப பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். இதனால் மனமுடைந்த பாலய்யா நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பாலய்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com