காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் போலீசார் சின்னமுத்தூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கிரி என்கிற கோவிந்தசாமி (வயது 45), வேடியப்பன் (35), கோபி (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், கெலமங்கலம் போலீசார், வெள்ளிச்சந்தை ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள புளியமரத்து அடியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாராயணப்பா (34), யு.புரம் செல்வராஜ் (50), நீலகிரி முனிராஜ் (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com