கால்வாய் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

கால்வாய் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தை அடுத்த கரகூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 54). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், கடந்த 22-ந் தேதி இரவு வீட்டை விட்டு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில், நேற்று கரகூர் கூட்ரோடு அருகில் ஓடும் பாசன கால்வாய தண்ணீரில் மூழ்கி பொன்னுசாமி பிணமாக கிடந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com