காவேரிப்பட்டணம் அருகே சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி

காவேரிப்பட்டணம் அருகே சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

கிருஷ்ணகிரி:

காவேரிப்பட்டணத்தை அடுத்த முதலைகான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மன்னுகான் (வயது 70).இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று, சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com