கண்ணமங்கலம் அருகே பெண் தற்கொலை

கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் குடிமி குடிசை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 51), பஸ் டிரைவர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏழுமலைக்கும், அவரது மனைவி சாந்திக்கும் (46) குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சாந்தி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com