கண்ணமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

கண்ணமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலத்தை அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி புஷ்பா (வயது 50). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நிலத்தில் வேர்க்கடலை பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பம்புசெட் கதவை திறந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் புஷ்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புஷ்பாவின் மகன் சிவராமன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com