கந்திகுப்பம் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

கந்திகுப்பம் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பர்கூர்:

கந்திகுப்பம் அருகே உள்ள சூலமலை குறும்பர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 37). பெயிண்டர். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. நேற்று மீண்டும் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் விரைந்து சென்று வெங்கடாசலத்தின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com