காஞ்சீபுரம் அருகே தொழிலாளி தற்கொலை

காஞ்சீபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 52). நெசவு தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தன்னுடைய மகளுக்கு திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் விஜயராகவன் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் காஞ்சீபுரம் அருகே பரந்தூர் பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரையில் திராவகம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com