நடிகராக பார்க்காமல் உங்கள் வீட்டு விளக்காக பாருங்கள்-கமல்ஹாசன்

நடிகராக பார்க்காமல் உங்கள் வீட்டு விளக்காக பார்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

புதுச்சேரி:

மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் விழுப்புரம்-கடலூர் பகுதிகளில் தேர்தல் பிரசார சுற்று பயணம் செய்தார். பின்னர் அவர் நேற்று இரவு புதுவைக்கு வந்தார்.

புதுவை கம்பன் கலையரங்கில், "புதியதோர் புதுவை செய்வோம்" என்ற தலைப்பில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகம், புதுவை நிர்வாக ரீதியாக வேறு வேறு மாநிலமாக இருந்தாலும் மொழி, இனம் பண்பாட்டால் நாம் அனைவரும் தமிழர்கள்.

புதுவையை ஊழல் அரசியல்வாதிகள், ரவுடிகள் மாறி மாறி அதிகாரத்தை கைப்பற்றி சீரழித்து விட்டனர் என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு உதாரணமாக புதுவையில் தற்கொலை எண்ணிக்கை தேசிய அளவை விட அதிகமாக உள்ளது.

புதுவை சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் என் நேரடி பார்வையில் போட்டியிடும்.

புதுவையை முன் மாதிரி மாநிலமாக மாற்றி காட்டுவேன். புதுவையை உலகவரைபடத்தில் இடம் பெற செய்யும் தகுதி மக்கள் நீதி மைய்யத்திற்கு உள்ளது. புதுவையின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்தை பெற்று தருவோம். இந்த எழுச்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

வருங்காலத்தில் மக்கள் நீதி மய்யம் பெறும் விருட்சமாக மாறும். நான் மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே.

உலகில் அனைவரும் என் குடும்பம் என்று நினைப்பவன் நான். தமிழ் வளர்த்தோரை புதுவை வளர்த்துள்ளது. என்னை திரை நட்சத்திரமாக பார்க்காமல், உங்கள் வீட்டு விளக்காக பார்க்க வேண்டும். ஒளி வீசும் திரியாக என்னை ஏற்ற வேண்டும்

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com