கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருவண்ணாமலை:

கலசபாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). ஆதமங்கலம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (43). இவர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை காணவில்லை என்று கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில், கடலாடி இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள்களை திருடியது வெங்கடம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (20), காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த மணி என்ற அய்யப்பன் (20) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com