கலசபாக்கம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கலசபாக்கம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கலசபாக்கம்:

கலசபாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 59). இவர் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கிவந்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கலசபாக்கம் அடுத்த மாதிமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அவரை கடலாடி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 48 வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com