கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் போராட்டம்

கோவில்களை திறக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக வழிபாட்டு தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் கோவில்களை திறக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி வடக்கு மாட வீதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் முன்பு, இந்து முன்னணி சார்பில் நேற்று காலை கற்பூரம் ஏற்றும் போராட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் கலைகோபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யுகேஷ்வரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்த போராட்டத்தில், கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி கோவில்களை திறக்க வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினார்கள். இதே போல், கிருஷ்ணகிரி பாரதிநகரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் முன்பும் இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோவில் வெளி பகுதியில் கற்பூரம் ஏற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com