நோணாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பட்டதாரி வாலிபர் படுகாயம்

நோணாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுச்சேரி:

அரியாங்குப்பம் டோல்கேட் அரவிந்த் நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (வயது22). இவர் பி.ஏ.பி.எட். படித்து விட்டு வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவர் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் தவளக்குப்பத்துக்கு சென்றார். நோணாங்குப்பம் படகு குழாம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து மோகன்ராசை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மோகன்ராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com