சிவகங்கை அருகே வாகன சோதனை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் பலி

சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அரசு பஸ் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

சிவகங்கை:

சட்டமன்ற தேர்தலயொட்டி பணப்பட்டு வாடாவை சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகினறனர்.

அதன்படி நேற்று இரவு சிவகங்கை அருகே தாயமங்கலம் ரோட்டில் பறக்கும் படை அதிகாரி அசோக்குமார் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பால சுப்பிரமணியம், சந்தன குமார், ஜீவா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் பால சுப்பிரமணியம், சந்தன குமார், ஜீவா ஆகிய 3 பேர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com