புதுச்சேரி, காரைக்காலில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.50 கோடி- கவர்னர் ஒப்புதல்

உள்ளாட்சித்துறையின் அதிகார எல்லைக்கு உட்பட்ட 20 கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த ரூ.15 கோடியே 91 லட்சம் என மொத்தம் ரூ.49 கோடியே 63 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்-2-ன் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 25 கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த ரூ.33 கோடியே 72 லட்சம், உள்ளாட்சித்துறையின் அதிகார எல்லைக்கு உட்பட்ட 20 கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த ரூ.15 கோடியே 91 லட்சம் என மொத்தம் ரூ.49 கோடியே 63 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதேபோல் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் புதுச்சேரி முதியோர் பாதுகாப்பு சங்கத்திற்கு (பாண்கேர்) நிதி உதவியாக ரூ.93 லட்சத்து 15 ஆயிரத்து 64 வழங்கியதற்கான செலவினத்திற்கு பிந்தைய ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com