கோபி அருகே விபத்தில் தொழிலாளி பலி

கோபி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கடத்தூர்:

கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 34). கூலி தொழிலாளி. இவர் கடந்த 20-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தண்ணீர் பந்தல் புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com